×

பெண் செயலாளருடன் ரேகா கள்ளத்தொடர்பு: சுயசரிதையில் அம்பலம்

மும்பை: ‘தி அன்டோல்ட் ஸ்டோரி’ என்ற பெயரில் நடிகை ரேகாவின் சுயசரிதை புத்தகத்தை யாசிர் உஸ்மான் எழுதி வெளியிட்டுள்ளார். அதில், ரேகா பற்றிய திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த புத்தகத்தில், ரேகா தனது பெண் செயலாளரான பர்சானாவுடன் நெருக்கமான உறவில் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. ரேகாவின் படுக்கையறைக்குள் அனுமதிக்கப்பட்ட ஒரே நபர் பர்சானா என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. ரேகாவும் பர்சானாவும் இளம்வயதில் இருந்து நெருங்கி பழகியதாகவும், வெளியூர், வெளிநாடு சென்றாலும் ஒன்றாகத்தான் செல்வார்கள் என்று புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.

ரேகா, பர்சானா இல்லாமல் சிறிது நேரம் கூட இருக்க மாட்டார் என்பது பலருக்கு தெரியாத விஷயம். புத்தகத்தில், ரேகாவின் கணவர் முகேஷ் அகர்வாலின் தற்கொலைக்கு பர்சானாவும் காரணம் என்று யாசர் கூறி உள்ளார். தனது 15 வயதில் இந்தியில் ‘அஞ்சனா சபர்’ என்கிற படத்தின் மூலம் ரேகா அறிமுகம் ஆனார். அப்போது ரேகாவுக்கு தெரியாமல் இயக்குனரும் ஹீரோ பிஸ்வஜித் சட்டர்ஜியும் பேசி வைத்துக்கொண்டு ஒரு காட்சியை படமாக்கினார்.

அதில் ரேகாவுக்கு தொடர்ந்து 1 நிமிடம் உதட்டில் முத்தம் தந்தாராம் பிஸ்வஜித் சட்டர்ஜி. இந்த காட்சி முடிந்ததும் ரேகா அழுதுள்ளார். நடிகர்கள் அமிதாப் பச்சன், ராஜ் பப்பார், வினோத் மெஹ்ரா, கிரண் குமார், சத்ருகன் சின்ஹா, சாஜித் கான், அக்ஷய் குமார், சஞ்சய் தத் எனப் பலருடனும் ரேகா நெருங்கிப் பழகியுள்ளார். இந்த விவரங்களும் சுயசரிதையில் இடம்பெற்றுள்ளது.

The post பெண் செயலாளருடன் ரேகா கள்ளத்தொடர்பு: சுயசரிதையில் அம்பலம் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Rekha ,Mumbai ,Yasir Usman ,Barsana… ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED ராணிப்பேட்டையில் வீட்டுக்குள் இருந்த...